கடலூர்

கஞ்சிக் கலய ஊர்வலம்

தினமணி

தட்டாம்பாளையத்தில் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கஞ்சிக் கலய ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 முன்னதாக, சக்தி கொடியேற்றத்துடன் கலச விளக்கு வேள்வி பூஜை, ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் சமுதாய நலப் பணிகள் நடைபெற்றன. கடலூர் மாவட்டத் தலைவர் கு.கிருபானந்தன் வேள்வி பூஜையை தொடக்கி வைத்தார். பொருளாளர் ஜெயபால், இணைச் செயலர்கள்(இளைஞர்) சங்கரன், (பிரசாரம்) சுப்பிரமணியன், பழனிவேல், பண்ருட்டி வட்டத் தலைவர் முத்துக்குமரன், பத்மப்பிரியா, ரவி, பண்ருட்டி சக்தி பீட பொருளாளர் முத்துக்குமரப்பன், மாவட்டக் கல்வி அலுவலர் (ஓய்வு) சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தில் செவ்வாடை தொண்டர்கள் சுமார் 300 பேர் கஞ்சி கலயம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து வந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT