கடலூர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரேமலதா சுவாமி தரிசனம்

DIN

சிதம்பரம் நடராஜர் கோயில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்கு சிதம்பரம் வந்த அவர், நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் மிகப்பெரிய எழுச்சியைக் காணமுடிகிறது. அதிமுக கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்தக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பிரசாரத்துக்கு வருவார்.
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி விசி இருக்கிறது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் அமோக வெற்றி பெறுவார். நிச்சயம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்றார் அவர். முன்னதாக கோயிலுக்கு வந்த பிரமலதாவுக்கு கோயில் பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். மாவட்ட தேமுதிக பொறுப்பாளர் சிவகொழுத்து, மாநில துணைச் செயலர் உமாநாத், மாவட்ட அவை தலைவர் பாலு, மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT