வடலூர்-புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமுருகன் தலைமை வகித்தார். வடலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜி.கலா அறிவியல் கண்காட்சியை தொடக்கி வைத்தார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மதியழகன், சுமதி, சண்முகம், சக்திவேல், பழநிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.