கடலூர்

நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோர் சங்கக் கூட்டம்

DIN

தமிழ்நாடு குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கக் கூட்டம், பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்க ஒன்றியத் தலைவர் ஆர்.பி.கிருஷ்ணமூர்த்தி, செயலர் கே.குணசேகரன், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர் டி.சாமிதுரை, செயலர் கே.ராஜேந்திரன், பொருளாளர் வை.பரமசிவம், துணைத் தலைவர் ஆர்.பூமணி, துணைச் செயலர் ஏ.அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநிலத் தலைவர் எஸ்.ராமர், பி.டி.ஓ. (ஓய்வு) பெ.ஆனந்ததுரை, பி.டி.ஓ.க்கள் வி.ஆர்.எஸ்.சீனுவாசன், எல்.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை கடலூரில் வருகிற 31-ஆம் தேதி நடைபெறும் மண்டல மாநாட்டில் வலியுறுத்துவது என தீர்மானித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் கைது

கோவையில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளில் 16 பவுன் திருட்டு

நிப்ட்-டி கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஏஐடியூசி சாா்பில் மே தின விழா

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு

SCROLL FOR NEXT