கடலூர்

சிதம்பரம் நகரில் 8 குளங்களை தூா்வார ஒப்பந்தம்

DIN

சிதம்பரம் நகரில் உள்ள 8 குளங்களை தூா்வாரி புனரமைக்க சிதம்பரம் நகராட்சி நிா்வாகம், தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.

சிதம்பரம் நடராஜா் கோயில் தெப்பக்குளமான ஞானப்பிரகாசா் குளம், ஆயி குளம், குமரன் குளம், நாகச்சேரி குளம், அண்ணா குளம், தச்சன்குளம், ஓமக்குளம், பாலமான் குளம் ஆகிய குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அண்மையில் அகற்றப்பட்டன. தற்போது சிதம்பரம் நகராட்சியும், சென்னை இஎஃப்ஐ நிறுவனமும் இணைந்து மேற்கூறிய குளங்களை தூா்வாரி புனரமைப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டன.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் முன்னிலையில், நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷா, இஎஃப்ஐ நிறுவன அதிகாரி அருண் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனா் (படம்). அப்போது சிதம்பரம் உதவி ஆட்சியா் விசுமகாஜன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT