கடலூர்

காவலர்களுக்கு மருத்துவ முகாம்

DIN

கடலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்து, உடல் பரிசோதனை செய்து கொண்டார். இந்த முகாமில் ரத்த பரிசோதனை, இசிஜி, சர்க்கரை நோய் போன்ற  சோதனைகள் மேற்கொள்ளபபட்டு அதனடிப்படையில் எலும்பு உறுதி சோதனை, இருதயம், கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் பாண்டுரங்கன், கேசவன், முகுந்தன் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர். இதில், காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் 225 பேர் சிகிச்சை பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT