கடலூர்

தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: வடலூர் தெய்வ நிலையத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

DIN

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, பந்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தெய்வ நிலைய செயல் அலுவலர் ரா.கருணாகரன் தலைமையில், தெய்வ நிலைய பூசகர்கள் சன்மார்க்க முறைப்படி பூஜை செய்து பந்தக்கால் நட்டனர். 
நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் சன்மார்க்க சங்கம் செளந்தரராஜன், தெய்வ நிலைய கணக்கர் .த.ஞானபிரகாசம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, வள்ளலார் தெய்வ நிலையத்தில் வருகிற 20-ஆம் தேதி கொடியேற்றமும், 21-ஆம் தேதி ஜோதி தரிசனப் பெருவிழாவும் நடைபெற  உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT