கடலூர்

சமத்துவப் பொங்கல் விழா

DIN

நெய்வேலி, பெரியாக்குறிச்சியில் உள்ள நரிக்குறவர் சமுதாய மக்கள் குடியிருப்புப் பகுதியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நியூ லைட் சாரிட்டபுள் டிரஸ்ட், டி.ஆர்.எம். சாந்தி கல்வி அறக்கட்டளை மற்றும் எம்.ஆர்.சரிப் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் எம்.ஆர்.சரிப் அறக்கட்டளை நிறுவனர் ஆர்.அன்வர்தீன் தலைமை வகித்தார்.  மனநல நிபுணர் சகாயராஜ் வரவேற்றார்.
அரிமா சங்க மாவட்டத் தலைவர் சி.லட்சுமிநாராயணன், தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
நிகழ்ச்சியில் நரிக்குறவர்கள் பெரியவர், சிறியவர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
டி.ஆர்.எம். சாந்தி கல்வி அறக்கட்டளை நிறுவனர் அரிமா டி.ராஜமாரியப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT