கடலூர்

துப்புரவுப் பணியாளர் சங்கக் கூட்டம்

DIN

தமிழ்நாடு ஊராட்சி கிராம குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்கம் சார்பில், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நன்றி அறிவிப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு, பண்ருட்டி ஒன்றியத் தலைவர் ஆர்.பி.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.சாமிதுரை, பொருளாளர் வை.பரமசிவம், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.முருகன், மாவட்டத் துணைச் செயலர் ராஜசேகர் சிறப்பு அழைப்பாளர்களாக் கலந்துகொண்டனர்.
 மாநிலத் தலைவர் எஸ்.ராமர் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் ஒன்றிய கெüரவத் தலைவர் பெ.ஆனந்ததுரை பேரூரை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT