கடலூர்

கார் விபத்து: நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பலி

DIN


கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே கார் விபத்துக்குள்ளானதில் அதிமுகவைச் சேர்ந்த பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
 பண்ருட்டி, மேலப்பாளையம்பாட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆயில் எஸ்.பி.ரமேஷ் (48). பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் அதிமுக கவுன்சிலரான இவர், சனிக்கிழமை காலை தனது காரை ஓட்டிச் சென்றார். நெல்லிக்குப்பம் காவல் சரகம், மருதாடு அருகே சுங்கச் சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
 இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரமேஷை அந்தப் பகுதியினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 31 லட்சம் நிலம் மோசடி: 2 பேர் கைது

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல

கடமையைக் கைகழுவும் அரசு!

முதியவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

SCROLL FOR NEXT