கடலூர்

குமராட்சியில் நாளை மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

DIN

சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடைபெறுகிறது.
இந்த முகாமில் அரசு,  அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாற்றுத் திறன் மாணவர்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமுக்கு வரும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அடையாள அட்டை, வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை தவறாமல் எடுத்துவர வேண்டும். 
 இந்த முகாம் தொடர்பாக, குமராட்சி கடை வீதியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரா.பாலமுருகன் தலைமையில், கல்வி அலுவலர்கள் தமிழ்மணி, ஜெயக்குமார், ஜான்சன், ராஜசேகர், ஆசிரியப் பயிற்றுநர்கள் க.முருகானந்தம், தா.மல்லிகா, கு.பாலசுப்பிரமணியன், அருள்ஜோதி வள்ளலார், ஸ்டாலின் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT