கடலூர்

குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் போராட்டம்

DIN

குடிநீர்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து, விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
 விருத்தாசலம் வட்டம், குப்பநத்தம் புதிய காலனியில் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
 இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பாலகிருஷ்ணன் என்பவரது தலைமையில் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், தங்களது கோரிக்கைகளை அலுவலகத்தில் மனுவாக அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT