கடலூர்

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி சாவு

DIN

கடலூர்: மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார். 
 சிதம்பரம் கள்ளுக்கடைசந்து பகுதியைச் சேர்ந்த செளந்தரபாண்டியன் மகன் கனகராஜ் (23). வெல்டிங் தொழிலாளி. இவர் சனிக்கிழமை அதே பகுதியில் உள்ள வெல்டிங் தொழில்பட்டறையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமுற்ற அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT