கடலூர்

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

DIN

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 மக்களவைத் தேர்தலையொட்டி, காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளுக்காக 321 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 326 வாக்களிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்களும் செவ்வாய்கிழமை காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
 தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயராகவன் தலைமையில், வட்டாட்சியர் தமிழ்செல்வன், தேர்தல் நடத்தும் துணை வட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர், அனைத்துக் கட்சியினர் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை தனி அறையில் பாதுகாப்பாக வைத்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT