கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக 100 டிகிரி வெயில்!

DIN

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் 100 டிகிரி வெயில் பதிவானது.
 வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் தீவிரப் புயலாக வலுடைந்துள்ளது. இந்தப் புயல் வருகிற 3 -ஆம் தேதி ஒடிஸா மாநிலத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு, 5 -ஆவது நாளாகத் தொடர்ந்தது.
 கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வானம் மேக மூட்டத்துடனே காணப்பட்டாலும், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
 கடலூரில் செவ்வாய்க்கிழமை 104 டிகிரி வெயில் பதிவான நிலையில், புதன்கிழமை 102.2 டிகிரி வெயில் பதிவானது.
 கோடை காலம் தொடங்கிய நிலையில் முதல் முறையாக 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. சில நேரங்களில் வெப்ப காற்று வீசியது. இதனால், வித்தியாசமான கால நிலையை உணர முடிந்தது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT