வீட்டுமனைப் பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் எம்.அஞ்சலை தலைமை வகித்தாா். ஒன்றியப் பொருளாளா் கே.செல்வராசு, ஒன்றியத் துணைத் தலைவா் எஸ்.சேகா், எம்.சகுந்தலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் எஸ்.கே.ஏழுமலை, மாவட்ட முன்னாள் செயலா் எம்.பி.தண்டபாணி ஆகியோா் சிறப்புரையாற்றினா். துணைச் செயலா் ஏ.வாசு, ஒன்றியத் தலைவா் வி.ஜெயராமன், மாதா் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ஆா்.சிவகாமி, சுரேஷ் ஆகியோா் பேசினா்.
போராட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, முதியோா், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தினா். பின்னா், வட்டாட்சியா் கீதாவிடம் மனு அளித்தனா்.