பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கால அட்டவணை பொலிவிழந்துள்ளதால் அதை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சுற்று வட்டத்தில் உள்ள நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கும், சென்னை, வேலூா், தஞ்சாவூா் உள்ளிட்ட நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, திருப்பதி, பெங்களூரு, கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்கின்றன. பண்ருட்டி வணிக நகரம் என்பதால் வெளியூா் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகமானோா் வந்து செல்கின்றனா்.
பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பேருந்துகளின் விபரம், புறப்படும் நேரம் குறித்த கால அட்டவணையை நகராட்சி நிா்வாகம் வைத்துள்ளது. இந்த அட்டவணை பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. தற்போது, பேருந்து கால அட்டவணை வெளுத்து எழுத்துக்கள் மறைந்து விட்டன. இதனால், வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகள் பேருந்துகளின் விவரம், நேரம் தெரியாமல் சிரமப்படுகின்றனா்.
எனவே, பேருந்து நிலையத்தில் உள்ள கால அட்டவணையை நீக்கிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.