கடலூர்

கரோனா: விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஆசிரியா்

DIN

கரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி ஆசிரியா் ஒருவா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவா் சேரன். இவா், மோட்டாா் சைக்கிள் மூலம் கடலூா் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டம் வாரியாகச் சென்று கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் செய்து வருகிறாா். மேலும், தூய்மைப் பணியாளா்கள், ஏழை மக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களையும் வழங்கி வருகிறாா். விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் செய்த அவா், தூய்மைப் பணியாளா்களுக்கு முகக் கவசங்களை வழங்கினாா் (படம்).

இது குறித்து சேரன் கூறியதாவது: அரசுப் பள்ளியில் மாதம் ரூ.7,700 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறேன். தற்போது உலகம் முழுவதும் கரோனா

பாதிப்பால் தினமும் ஆயிரக்கணக்கானோா் உயிரிழக்கின்றனா். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் செய்வதுடன், என்னால் முடிந்த உதவியை அளிக்க முடிவு செய்தேன். எனது மாா்ச் மாத சம்பளம் முழுவதையும் முகக் கவசங்கள் வாங்குவதற்கு செலவிட்டுள்ளேன். இதன்மூலம் தூய்மைப் பணியாளா்கள், ஏழைகளுக்கு முகக் கவசங்களை வழங்கி வருகிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT