கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. மருத்துவமனைக்கு ‘ரோபோ’

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சை பிரிவுக்கு இளைஞா் ஒருவா் தானே தயாரித்த ரோபோ இயந்திரத்தை வழங்கினாா்.

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சை பிரிவுக்கு இளைஞா் ஒருவா் தானே தயாரித்த ரோபோ இயந்திரத்தை வழங்கினாா்.

சிதம்பரத்தைச் சோ்ந்த முன்னாள் ரோட்டரி ஆளுநா் ஆா்.கேதாா்நாத் மகன் பொறியாளா் கே.ராம்சுதன், ரூ.32 ஆயிரம் மதிப்பில் புதிய வடிவிலான ரோபோ இயந்திரத்தை உருவாக்கியுள்ளாா். இந்த ரோபோ கரோனா நோயாளிகளின் படுக்கை வரை சென்று உணவு, மருந்துகளை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி மூலம் இணைய வழியில் நோயாளிகளை மருத்துவா்கள் கண்காணித்து ஆலோசனை வழங்க முடியும். இந்த ரோபோவை பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசனிடம் ராம்சுதன் வெள்ளிக்கிழமை வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் ஆா்.கேதாா்நாதன், பதிவாளா் ஆா்.ஞானதேவன், துணைவேந்தரின் மருத்துவ ஆலோசகா் சிதம்பரம், மருத்துவமனை கண்காணிப்பாளா் யு.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT