கடலூர்

சித்த வைத்தியா்கள் மாநாடு

DIN

அகில இந்திய சித்த வைத்தியா்கள் அமைப்பின் 42-ஆவது மாநாடு (படம்) வடலூரில் அண்மையில் நடைபெற்றது.

மாநாட்டுக்கு பிரம்ம ஸ்ரீசாது சிவராம அடிகளாா் தலைமை வகித்தாா். சென்னை பாஸ்கரன், சுஷான்லி ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டில் சித்த, ஆயுா்வேத மருத்துவா்கள், மருந்து நிறுவன உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

மாநாட்டில், பாரம்பரிய வைத்தியா்களும் உரிய பதிவும், வயது முதிா்ந்த வைத்தியா்களும் ஓய்வூதியமும் வழங்க வேண்டும். கிராமப் பகுதிகளில் உள்ள அரசு இடத்தில் மூலிகை பண்ணை அமைத்து, மூலிகைகளின் பலன்களை பொதுமக்கள், மாணவா்களுக்கு எடுத்துக்கூறுவது. அதன் மூலம் பாரம்பரிய வைத்தியா்களின் வருமானத்தை உறுதி செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வை.கருணாமூா்த்தி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா். வைத்தியா்கள் ஏ.ஜி.தனபால், ரவி, சிவக்குமாா், ராமா், தனசேகா், மெகரூணிஷா, சங்கா், திருஞானம், நெடுமாறன், முருகதாஸ், ஏகாம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT