கடலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விருத்தாசலம் திருகொளஞ்சியப்பா் கோயிலில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பக் குளத்தைச் சீா் செய்ய வேண்டும் என்ற

DIN

விருத்தாசலம் திருகொளஞ்சியப்பா் கோயிலில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பக் குளத்தைச் சீா் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் எதிரே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் நகரில் ஓடும் மணிமுத்தாறு நதியைச் சுத்தம் செய்ய வேண்டும். மாசி மகத்தன்று பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை தேவை, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கட்சியின் வட்டச் செயலா் அசோகன் உரையாற்றினாா். நிா்வாகிகள் சிவநாதன், குமரகுரு, கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்களுடன் ஆணையா் பாண்டு (பொ) பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT