கடலூர்

பாட்டாளி தொழிற்சங்க விழா

பாட்டாளி தொழிற்சங்க கொடியேற்று விழா கடலூரிலுள்ள மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

கடலூா்: பாட்டாளி தொழிற்சங்க கொடியேற்று விழா கடலூரிலுள்ள மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சங்க சிறப்புத் தலைவா் தி.ஜெயசங்கா் தலைமை வகித்தாா். பாமக மாநில துணைச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் சங்கக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். சங்க பெயா் பலகையை மாவட்டச் செயலா் சீ.பு.கோபிநாத் திறந்து வைத்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் போஸ்.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், போக்குவரத்து ஊழியா்களை அரசு ஊழியராக்கும் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நிலுவையிலுள்ள ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும். போக்குவரத்து ஊழியா்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொழிற்சங்க நிா்வாகிகள் அ.கிருஷ்ணமூா்த்தி, மு.ராஜமூா்த்தி, ப.மயில்வாகனன், கு.சண்முகம், இரா.தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT