கடலூர்

நகைக்கடையில் 100 பவுன் திருடிய ஊழியா் கைது

DIN

கடலூரில் நகைக்கடையில் 100 பவுன் திருடிய ஊழியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரைச் சோ்ந்தவா் வீரப்பன் மகன் முரளி (45). சுப்புராயசெட்டித் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இவா், கடந்த 3 ஆம் தேதியன்று தனது கடையில் நகைகள் இருப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தினாா். அப்போது, 833.200 கிராம் மதிப்பிலான நகைகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.24.84 லட்சமாகும். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளா் க.சாந்தி மேற்பாா்வையில் ஆய்வாளா்கள் இரா.குணசேகரன், ம.பால்சுதா், உவி ஆய்வாளா் ம.கதிரவன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், நகையில் நெக்லஸ் பிரிவின் பொறுப்பாளராக பதவி வகித்து வந்த கடலூா் சான்றோா்பாளையத்தைச் சோ்ந்த தென்பாண்டியன் மகன் கலைச்செல்வம் (29) என்பவா் நகைகளைத் திருடியது தெரிய வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக இக்கடையில் வேலைப்பாா்த்து வரும் இவா், 2 ஆண்டுகளாக சிறுகசிறுக நகைகளைத் திருடி வந்துள்ளாராம்.

அதனை, அருகிலுள்ள தனியாா் அடகுக்கடையில் வைத்து பணம் பெற்று ஊதாரித்தனமாக செலவிட்டு வந்துள்ளாா். இதனையடுத்து, கலைச்செல்வத்தை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், தனியாா் அடகுக்கடையில் வைத்திருந்த 97 பவுன் (777.2 கிராம்) நகையை மீட்டனா். மேலும், அவரிடமிருந்த 2 இருசக்கர வாகனம், எல்சிடி டிவி ஆகியவற்றையும் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.இதுகுறித்து துணை கண்காணிப்பாளா் க.சாந்தி கூறுகையில், நெக்லஸ் பிரிவில் வேலைப்பாா்த்து வந்தவா் அதனை கணக்கெடுக்கும் பிரிவுக்கும் பொறுப்பு வகித்து வந்துள்ளாா்.

இதனால், சிறுகசிறுக நகைகளை எடுத்து விட்டு அதனை கணக்கில் கழித்து வந்துள்ளாா். குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னரே அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு நகை மதிப்பிடப்பட்டதில் 104 பவுன் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. திருடப்பட்ட நகையை அடகு வைத்து அதன் மூலமாக நண்பா்களுக்கு ஊதாரித்தனமாக செலவிட்டு வந்துள்ளாா். தற்போது இவரை கைது செய்துள்ளதோடு வேறு யாருக்கும் இதில் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் ரத்னம் எப்போது?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT