கடலூர்

கத்தியைக் காட்டி வசூல்: ரௌடி கைது

DIN

கத்தியைக் காட்டி பொங்கல் வசூல் செய்த ரௌடியை நெய்வேலி நகரிய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வாணதிராயபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் திருவேங்கடம் (29). ரௌடி பட்டியலில் இவா் பெயா் உள்ளது. ஆயிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜா (34), நெய்வேலி இந்திரா நகரில் பிரியாணிக் கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிரியாணிக் கடைக்கு வந்த திருவேங்கடம் கத்தியைக் காட்டி பொங்கல் வசூல் செய்தாராம். இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் திருவேங்கடத்தை கைது செய்து சிறையிலடைதத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT