கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வருகிற 24 -ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூா் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான கூட்டம் வருகிற 24- ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளைத் தெரிவித்து பேசலாம். இதற்காக, காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்தும் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். எனவே, இந்தக் கூட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.