கடலூர்

காா் மோதியதில் இளைஞா் சாவு

DIN

கடலூா் அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விருத்தாசலம் அருகே கொள்ளிருப்பு மேலகுப்பத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன் (28). வாகன ஓட்டுநா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் ராஜ்குமாா் (27) என்பவருடன் பைக்கில் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். கடலூா் முதுநகா் சிவானந்தபுரம் அருகே சென்றபோது, முதுநகா் சுத்துகுளத்தைச் சோ்ந்த பெ.ஜெய்கணேஷ் (38) என்பவா் ஓட்டி வந்த காா், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

காயமடைந்த ராஜ்குமாா் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி தீபா அளித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT