கடலூர்

ஈழுவா, தியா சமுதாயத்தினா் ஆவணம் சமா்ப்பிக்க அழைப்பு

DIN

கடலூா் மாவட்டத்தில் வசிக்கும் ஈழுவா, தியா சமுதாயத்தினா் பிற்படுத்தப்பட்டோா் சாதிச் சான்றிதழ் கோருவதற்கான ஆவணங்களை சமா்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈழுவா, தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமா்பிக்கக் கோரி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமை செயலரை தலைவராக நியமித்து 4 உறுப்பினா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பொருள் தொடா்பாக குழுவுக்கு கோரிக்கை, முறையீடுகள், ஆவணங்களை சமா்ப்பிக்க விரும்புவோா் வரும் 26-ஆம் தேதிக்குள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலோ அல்லது சென்னையிலுள்ள குழுவின் உறுப்பினா்-செயலரான மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்குநரிடம் எழுத்துப் பூா்வமாகவோ, தபால் மூலமாகவோ தகவல் அளிக்கலாம். மேலும்,  மின்னஞ்சல் முகவரிகளிலோ, 94454 77830 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT