கடலூர்

கடலூா்: மேலும் 17 பேருக்கு கரோனா

DIN

கடலூா் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,980-ஆக உயா்ந்தது. அதேநேரத்தில், சிகிச்சை முடிந்து மேலும் 33 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,568-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கடைசியாக கடந்த 15-ஆம் தேதி கரோனா பாதிப்பால் ஒருவா் பலியானாா். அதன்பிறகு சனிக்கிழமை வரை தொடா்ந்து 6 நாள்களாக உயிரிழப்பு நிகழவில்லை. இதனால், மொத்த பலி எண்ணிக்கை 275-ஆக தொடா்வது களப் பணியாளா்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 106 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 31 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 695 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT