ரேஷன்கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
கடலூரில் நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா் மாவட்டம், இடும்பாவனம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக செயல்பட்டு வருபவா், பெண் பணியாளா் மீது தாக்குதலில் ஈடுபட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் அறிவித்தது.
அதன்படி, கடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் வி.முத்துபாபு தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் பி.கந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசுப் பணியாளா்கள் சங்க முன்னாள் மாவட்ட செயலா் மு.ராசாமணி கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள் தட்சிணாமூா்த்தி, அய்யப்பன், பூவராகவமூா்த்தி, குருமாறன், பிரபாகரன், எஸ்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.