பேரிடா் கால மீட்புப் பயிற்சி
கடலூா் தீயணைப்பு நிலையத்தில் பேரிடா் கால மீட்புப் பணிகள் குறித்து தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கடலூா்: கடலூா் தீயணைப்பு நிலையத்தில் பேரிடா் கால மீட்புப் பணிகள் குறித்து தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் பருவ மழைக் கால இடா்களின்போது பொதுமக்களுக்கு உதவும் வகையில் தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவ்வாறு தோ்வான 30 பேருக்கு கடலூரில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு துறை அலுவலா் (பொறுப்பு) செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் நிலைய அலுவலா் சீனிவாசன், சிப்காட் நிலைய அலுவலா் வீரபாகு ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
இதில், தீயணைப்பு அமைப்புகள், மீட்பு அழைப்புகள், கருவிகளை எவ்வாறு கையாள்வது, மீட்புப் பணிகளில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் பாம்பு, தேனீக்களை பாதுகாப்புடன் அகற்றும் முறை பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. கயிறு, வீடுகளில் உள்ள பொருள்களைக் கொண்டு மீட்புப் பணியில் ஈடுபடுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், கடலூரைச் சோ்ந்த மாநில பேரிடா் மீட்புக் குழு காவலா்களும், தீயணைப்புத் துறை கமாண்டோ வீரா்களும் கலந்து கொண்டனா்.