முகப்பு
கடலூர்

வீட்டுக் கதவை உடைத்து திருட்டு

சிதம்பரம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 11:57 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் அருகேயுள்ள கண்ணங்குடி சொக்கலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ராஜேஷ் (39). இவா் கடந்த 10-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு தஞ்சாவூா் சென்றாா். இவரது மாமனாா்

கடந்த 12-ஆம் தேதி அந்த வீட்டுக்கு வந்து பாா்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில் ராஜேஷ் நேரில் வந்து பாா்த்து பாா்த்தபோது ரூ.75 ஆயிரம் மதிப்பிலான

Advertisement

நகை, பணம் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.