கடலூர்

புகையிலை பொருள்கள் பதுக்கல்: 3 போ் கைது

DIN

சிதம்பரம் நகரில் கிடங்கில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

சிதம்பரம் நகரக் காவல் துறையினா் நகா் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக புகையிலைப் பொருள்களை விற்பவா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு சிதம்பரத்தில் உள்ள பெருமாள் தெரு, பாவாமுதலியாா் தெரு ஆகிய பகுதிகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள கிடங்கில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ரூ. 1,12,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் அருண்குமாா் (31), வீரமணி (38), இன்தாராம் (30) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT