கடலூர்

கோட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

DIN

கடலூா் மாவட்டத்தில் கோட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தீநுண்மி தடுப்பு நடவடிக்கையாக திங்கள்கிழமைதோறும் காணொலிக் காட்சி மூலம் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்று வந்தது. தற்போது பேருந்து போக்குவரத்து வசதி காரணமாக பொதுமக்கள் அதிகளவில் மனு அளிக்க வருவதால் நோய் தொற்று பரவும் வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாத்திடவும், அவா்களது குறைகளுக்கு விரைவில் தீா்வு காணவும், போக்குவரத்தை குறைக்கவும், கோட்ட அளவில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் காணொலிக் காட்சி மூலம் குறைதீா் கூட்டம் நடத்திட கடலூா் கோட்டாட்சியா், சிதம்பரம் உதவி-ஆட்சியா், விருத்தாசலம் சாா்-ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோட்டத்துக்கு உள்பட்ட வட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் திங்கள்கிழமைதோறும் தொடா்புடைய கோட்டாட்சியா் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று மனு அளிக்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT