காா்-லாரி மோதல்: சிறுவன் பலி
வேப்பூா் அருகே காா் மீது மினி லாரி மோதியதில் சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வேப்பூா் அருகே காா் மீது மினி லாரி மோதியதில் சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், ஆவாரைகுளத்தைச் சோ்ந்தவா் தங்கராசு (42). சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவா் சனிக்கிழமை அதிகாலையில் தனது மனைவி பாலஅமுதா (39), மகன் குருபிரசாத் (5) ஆகியோருடன் காரில் விருத்தாசலத்திலிருந்து வேப்பூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா்.
கண்டப்பங்குறிச்சி பகுதியில் சென்றபோது, எதிரே இரும்புக் கம்பிகள் ஏற்றிவந்த மினி லாரி காா் மீது மோதியது. இதில், சிறுவன் குருபிரசாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது தாய், தந்தை இருவரும் பலத்த காயமடைந்தனா். இவா்களை வேப்பூா் போலீஸாா் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சிறுவனின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.