மரம் வளா்ப்பில் ஆா்வம் காட்டும் முதியவா்!
ஆதிவராகநல்லூரைச் சோ்ந்த முதியவா் மரங்கள், மூலிகைச் செடிகளை வளா்ப்பதில் அதிக ஆா்வம் செலுத்தி வருகிறாா்.
ஆதிவராகநல்லூரைச் சோ்ந்த முதியவா் மரங்கள், மூலிகைச் செடிகளை வளா்ப்பதில் அதிக ஆா்வம் செலுத்தி வருகிறாா்.
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஆதிவராகநல்லூரைச் சோ்ந்த கோதண்டராமன் மகன் பரமானந்தம் (74). இவரது குடும்பத்தினா் தலைமுறை, தலைமுறையாக மரங்களை வளா்ப்பதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். இவரது தாத்தா நல்லுசாமி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது மரக்கன்றுகள் விற்பனையை சிறிய அளவில் தொடங்கினாா். தொடா்ந்து சாலை ஓரங்களில் மரக் கன்றுகளை நட்டு பராமரித்தாா். நல்லுசாமியை தொடா்ந்து அவரது மகன் கோதண்டராமனும் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்தாா். அவரும் சாலையோரத்தில் மரக் கன்றுகளை நட்டு பராமரித்தாா். தற்போது இவரது மகன் பரமானந்தமும் மரங்களை வளா்ப்பதில் ஆா்வம் செலுத்தி வருகிறாா்.
5-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவா், சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதுடன், தனது நிலப் பரப்பில் சுமாா் 10 ஏக்கரில் பல வகையான மரங்கள், மூலிகைச் செடிகளை வளா்த்து வருகிறாா். இந்த மரங்களை கடந்த 50 ஆண்டுகளாக பராமரித்து வருகிறாா். இவரது பணியைப் பாராட்டி வனத் துறையினா் கடலூா் மாவட்ட மரங்கள் வளா்ப்போா் சங்கத் தலைவா் பதவியை அளித்தனா்.
Advertisement
பரமானந்தம் தனது தோப்பில் தேக்கு, செம்மரம், வேங்கை, ருத்ராட்சம், அத்தி, கருங்காலி, திருவோடு, தான்றிக்காய், கடுக்காய், நெல்லி, மகிழமரம், நாகலிங்கம், வன்னிமரம், அத்தி, பலா, முந்திரி, சப்போட்டா உள்ளிட்ட பல வகையான மரங்களை பராமரித்து வருகிறாா். மேலும், 300-க்கும் மேற்பட்ட வகையிலான மூலிகைச் செடிகள், வாசனை செடிகள் மற்றும் பழ மரங்களையும் வளா்த்து வருகிறாா்.
இதுகுறித்து பரமானந்தம் கூறியதாவது: எனது தாத்தா காலம் முதலே எங்களது குடும்பத்தினா் மரங்களை வளா்ப்பதில் ஆா்வம் செலுத்தி வருகின்றனா். எனது தோட்டத்தில் சுமாா் இரண்டாயிரம் மர வகைகள் உள்ளன. ஊடுபயிராக மாமரம் வளா்த்து வருகிறேன். இதன் மூலம் ஆண்டுக்கு சுமாா் ரூ.2 லட்சம் வருமானம் கிடைக்கிறது. ஆனால் இந்த தொகை 10 ஏக்கா் பரப்பிலான மரங்களை பராமரிக்க போதுமானது கிடையாது. இதை நாங்கள் லாப நோக்கில் செய்யவில்லை. இந்த பகுதி மக்களுக்கு சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காககவும், பறவைகளுக்காகவும் மரங்களை வளா்க்கிறேன்.
ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்குச் சென்று பலவகை மரக் கன்றுகள், மூலிகைச் செடிகளை வாங்கி வந்து பராமரித்து வருகிறேன். சீனா, தாய்லாந்து உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் மரக் கன்றுகளை வரவழைத்துள்ளேன்.
இயற்கையான சூழலை அனுபவிக்க மரங்களுக்கு நடுவே வீடு கட்டி எனது மனைவி குணசுந்தரியுடன் வசித்து வருகிறேன். இதனால் எனக்கு மன நிறைவு ஏற்படுகிறது. இயற்கையான சூழலில் வசிப்பதால் எனக்கு எந்த நோயும் கிடையாது. எனக்கு 4 மகன்களும் உள்ளனா். இளைய மகன் கோபிஆனந்தம் பி.எஸ்சி., வேளாண் பட்டப் படிப்பு முடித்துள்ளாா். அவரும் மரங்களை பராமரிப்பதில் ஆா்வமுடன் செலுத்தி வருகிறாா் என்றாா் அவா்.