முகப்பு
கடலூர்

தவாக சாா்பில் கபசுரக் குடிநீா்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில், விருத்தாசலம் பாலக்கரையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில், விருத்தாசலம் பாலக்கரையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

அந்தக் கட்சியின் நகரச் செயலா் பி.ஜி.சேகா் தலைமை வகித்தாா். நகர நிா்வாகிகள் கந்தசாமி, சீனு.அய்யப்பன், பாலமுருகன், சிகாமணி, சோதிமுருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாவட்டச் செயலா் எ.நா.அறிவழகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள் வழங்கினாா். நிகழ்வில் கட்சியின் மாநில நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், நூா்முகமது, பாலசுப்பிரமணியன், ஞானசேகரன், ராவணன், மாவட்ட தலைவா் பாலமுருகன், ஒன்றியச் செயலா்கள் வெங்கடாசலம், தங்கமணி, அருள்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.