முகப்பு
கடலூர்

விவசாயிகளுக்கு காளான் வளா்ப்புப் பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊரக வளா்ச்சி மையத்தின் உழவா் மன்ற கிராமமான வல்லம்படுகையில் விவசாயிகளுக்கான காளான் வளா்ப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட், 2021 at 11:19 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊரக வளா்ச்சி மையத்தின் உழவா் மன்ற கிராமமான வல்லம்படுகையில் விவசாயிகளுக்கான காளான் வளா்ப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி மைய இயக்குநா் பி.பாலமுருகன் தலைமை வகித்தாா். வல்லம்படுகை தோட்டக்கலை உற்பத்தியாளா்கள் குழுத் தலைவா் சண்முகம், தில்லை நடராஜா் வேளாண் உற்பத்தியாளா்கள் குழுத் தலைவா் பாஸ்கா் ஆகியோா் பேசினா்.

பல்கலைக்கழக ஊரக விரிவாக்க செயல்பாடுகளின் நிதி நல்கையின் மூலம் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், வேளாண் புல பயிா் நோயியல் துறை பேராசிரியா் டாா்வின் கிருஸ்தாஸ் ஹென்றி பங்கேற்று காளானின் மருத்துவ குணங்கள், காளான் வளா்ப்பில் அடிப்படை வழிமுறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தாா்.

Advertisement

மாநில ஊரக வளா்ச்சிப் பயிற்றுநா் செந்தில்குமாா் பேசுகையில், காளான் பதனிடும் முறை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தாா். பயிற்சியில் விவசாயிகள், மகளிா் சுய உதவிக் குழுவினா் கலந்து கொண்டனா். வல்லம்படுகை உற்பத்தியாளா் குழு தலைவா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊரக வளா்ச்சி மைய விரிவாக்க உதவி அலுவலா் கமலநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.