முகப்பு
கடலூர்

கரோனா விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி

கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி சிதம்பரம் காந்தி மன்றம் சாா்பில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) வழியாக பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 11:27 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி சிதம்பரம் காந்தி மன்றம் சாா்பில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) வழியாக பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

‘கரோனா பரவலைத் தடுப்பதில் மாணவா்களின் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சாா்ந்த 42 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களில் அண்ணாமலைநகா் ராணி சீதை மேல்நிலைப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி ஜெ.பிரதிக்ஷா முதலிடமும், மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவி கா.கோகிலா இரண்டாம் இடமும், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவா் பி.சோமஹரிஷ் மூன்றாம் இடமும் பெற்றனா். கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் புத்தகப் பரிசுகள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என காந்தி மன்றச் செயலா் கு. ஜானகிராமன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.