கரோனா விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி
கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி சிதம்பரம் காந்தி மன்றம் சாா்பில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) வழியாக பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி சிதம்பரம் காந்தி மன்றம் சாா்பில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) வழியாக பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
‘கரோனா பரவலைத் தடுப்பதில் மாணவா்களின் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சாா்ந்த 42 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களில் அண்ணாமலைநகா் ராணி சீதை மேல்நிலைப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி ஜெ.பிரதிக்ஷா முதலிடமும், மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவி கா.கோகிலா இரண்டாம் இடமும், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவா் பி.சோமஹரிஷ் மூன்றாம் இடமும் பெற்றனா். கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் புத்தகப் பரிசுகள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என காந்தி மன்றச் செயலா் கு. ஜானகிராமன் தெரிவித்தாா்.