கடலூர்

பைக் மோதியதில் தந்தை பலி; மகள் காயம்

DIN

கடலூா் அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் தந்தை பலியானாா். மகள் பலத்த காயமடைந்தாா்.

கடலூா் அருகே உள்ள செல்லஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் ரா.ராமதாஸ் (60). விவசாயி. புதன்கிழமை தனது மகள் திவ்யாவை (27) அழைத்துக் கொண்டு பைக்கில் சென்றாா். செல்லஞ்சேரி பகுதியில் சென்ற போது, எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்த இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு, ராமதாஸ் உயிரிழந்தாா். திவ்யா சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ராமதாஸின் மகன் கலைச்செல்வன் அளித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT