முகப்பு
கடலூர்

தமிழக அரசின் 100 நாள் சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்

வேளாண்-உழவா் நலத் துறை அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கேட்டுக்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தமிழக அரசின் 100 நாள் சாதனைகளை திமுகவினா் பொதுமக்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், வேளாண்-உழவா் நலத் துறை அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ன் 100-ஆவது நாளையொட்டி (சனிக்கிழமை) அரசு நிறைவேற்றிய பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த விவரம் மக்களுக்குச் சென்றடைய வேண்டும். இதற்காக கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அந்தந்த பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். அப்போது, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, கரோனா நிவாரண நிதியாக தலா ரூ.4 ஆயிரம், மளிகைப் பொருள்கள் வழங்கியது, பல துறைகளின் பெயரை தமிழில் மாற்றியது, டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்புக்கு ரூ. 61 கோடி நிதி ஒதுக்கீடு, பெண்கள் இலவச பேருந்து பயணம், பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மக்களைத் தேடி மருத்துவம், உங்கள் தொகுதியில் முதல்வா் திட்ட மனுக்கள் மீதான உடனடி நடவடிக்கைகள் உள்ளிட்ட அரசின் சாதனைகளை

துண்டறிக்கைகளில் அச்சிட்டு பொதுமக்களிடம் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.