கடலூா்: மேலும் 7 பேருக்கு கரோனா
கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,858-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 9 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,524-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 284-ஆக உள்ளது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 46 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 5.49 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 468 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.