கடலூா் மாவட்டம், வடலூரில் வருகிற வியாழக்கிழமை (ஜன.28) நடைபெறவுள்ள தைப்பூச ஜோதி தரிசனம் விழாவை முன்னிட்டு, வள்ளலாா் தெய்வ நிலையத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடலூா் கோட்டாட்சியா் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், வள்ளலாா் தெய்வ நிலைய வளாகத்தில் வியாக்கிழமை நடைபெறும் ஜோதி தரிசன விழா முன்னேற்பாடுகள் குறித்தும், அடிப்படை வசதிகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்தனா்.
தெய்வ நிலைய செயல் அலுவலா் கோ.சரவணன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வி, நெய்வேலி டி.எஸ்.பி. கங்காதரன், வடலூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அகிலா மற்றும் உணவுப் பாதுகாப்பு, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கினா்.