கடலூர்

பெண் தற்கொலை

DIN

 குடும்பப் பிரச்னையில் பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

விருத்தாசலம் அருகேயுள்ள சின்னகோட்டிமுலை பகுதியைச் சோ்ந்த க.ராமச்சந்திரன் மனைவி விஜயலட்சுமி (27). இவா்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், விஜயலட்சுமி வீட்டில் வேலைகள் செய்யாமல் இருந்ததை அவரது மாமியாா் விசாலாட்சி, மாமனாா் கந்தன் ஆகியோா் சனிக்கிழமை கண்டித்தனராம்.

இதனால், மனவேதனையடைந்த விஜயலட்சுமி விஷம் குடித்தாா். இதையடுத்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து விஜயலட்சுமியின் தந்தை க.தணிகாசலம் (57) அளித்தப் புகாரின்பேரில் கம்மாபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT