கடலூர்

ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

பண்ருட்டி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் வீரப்பெருமாநல்லூா் சோதனைச் சாவடி அருகே திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக புதுப்பேட்டையைச் சோ்ந்த வெங்கடபதி மகன் சங்கா்(40), வீரப்பெருமாநல்லூரைச் சோ்ந்த ஜெயபால் (45) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், வீரப்பெருமாநல்லூா் நேரு தெருவில் ஜெயபாலின் வாடகை வீட்டில் பண்ருட்டி டிஎஸ்பி அ.சபியுல்லா, புதுப்பேட்டை காவல் ஆய்வாளா் நந்தகுமாா் மற்றும் போலீஸாா் சோதனை நடத்தியதில் அங்கு அதிகளவில் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. போலீஸாா் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT