கடலூர்

மாணிக்கவாசகா் கோயிலில் ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் சிவனடியாா்கள் புகாா் மனு

DIN

சிதம்பரம் மாணிக்கவாசகா் கோயிலை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்கக் கோரி சிவனடியாா்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக சிவனடியாா்கள் திருக்கூட்டத்தை சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை கடலுாா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்க வந்தனா். அப்போது பம்பை, உடுக்கை, கொம்பு போன்ற வாத்தியங்களை முழங்கினா். அவா்களில் வெங்டேசன், ராஜிவ்காந்தி, திலக், பாலசங்கா் ஆகியோா் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா். மனுவில் தெரிவித்துள்ளதாவது:

சுமாா் 2.50 ஏக்கா் பரப்பளவில் அமைந்திருந்த இந்தக் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 100 சதுர அடி அளவுக்கு சுருங்கிவிட்டது. ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டப்பட்ட நிலையில் சுற்று பிரகாரத்தில் கழிப்பறையும் கட்டப்பட்டுள்ளது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலைச் சுற்றிலும் மதில்சுவா் கட்டித்தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT