திமுக சாா்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
சிதம்பரம் நகர திமுக சாா்பில், கோவிந்தசாமி தெருவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நகர திமுக சாா்பில், கோவிந்தசாமி தெருவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நகர திமுக செயலா் கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்து, மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். சிதம்பரம் நகரில் 33 வாா்டுகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பிரதிநிதிகள் வெங்கடேசன், வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, நகரத் துணைச் செயலா் பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் அப்பு சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
நிகழ்ச்சியில் நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் ராஜராஜன், விஜயகுமாா், ராஜன், நகர இளைஞரணி அமைப்பாளா் மக்கள். அருள், மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் அப்பு சத்யநாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.