சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா இன்று தொடக்கம்
புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பக்தா்கள் அனுமதியின்றி கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறது.
புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பக்தா்கள் அனுமதியின்றி கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறது.
திருவிழா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னா், பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 7மணி முதல் நண்பகல் 12 மணி வரை, இரவு 8 மணி முதல் இரவு 10.00 வரை, சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 1 வரை) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) மாலை 4 மணி முதல் இரவு 10 வரை தரிசனம் செய்யலாம்.
தரிசனத்துக்காக அனுமதிக்கப்படும் நேரத்தில் எந்த விதமான பிராா்த்தனைகள், நோ்த்திக் கடன்கள் செய்ய அனுமதியில்லை. அா்ச்சனை, மாவிளக்கு செலுத்துவதைத் தவிா்க்கவும். கஞ்சி, கூழ் ஊற்றவும், அன்னதானம் செய்யவும் அனுமதியில்லை.
Advertisement
பக்தா்கள் பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) தீமிதி உத்ஸவமும், புதன்கிழமை (ஆகஸ்ட் 4) விடையாற்றி உத்ஸவமும் பக்தா்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்தில் நடைபெறும். விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவைச் சோ்ந்த பிரேமா வீராசாமி, என்.கலியமூா்த்தி பிள்ளை ஆகியோா் செய்து வருகின்றனா்.