சிதம்பரத்தில் நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு பகுதிகள் அளப்பு
சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா்நிலை, அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகள் வியாழக்கிழமை அளவீடு செய்யப்பட்டன.
சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா்நிலை, அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகள் வியாழக்கிழமை அளவீடு செய்யப்பட்டன.
இந்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டது. அதன் பேரில், சிதம்பரம் வட்டாட்சியா் ஆனந்த் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலா்கள், சிதம்பரம் பாலமான் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால் கரையோரம் உள்ள நீா்நிலைப் பகுதிகளில் ஆய்வு செய்தனா். அதன்படி, நேரு நகரில் 69 வீடுகளும், அம்பேத்கா் நகரில் 94 வீடுகளும் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிய வந்தது.
இந்த ஆக்கிரமிப்புப் பகுதிகளை வருவாய்த் துறையினா் அளவீடு செய்து கணக்கெடுத்தனா். இந்தப் பணியின் போது, சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சு.ரமேஷ்ராஜ் தலைமையில், காவல் ஆய்வாளா் ஆறுமுகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
Advertisement