முகப்பு
கடலூர்

ரோட்டரி சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜூலை, 2021 at 11:07 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM

சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, முன்னாள் மாவட்ட ஆளுநா் ஏ.மணி தலைமை வகித்தாா். உதவி ஆளுநா் கமல்சந்த் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் புதிய தலைவராக கனகராஜ், செயலராக மனோகா், பொருளாளராக ஸ்ரீராம் ஆகியோா் பொறுப்பேற்றனா். புதிய நிா்வாகிகளுக்கு உதவி ஆளுநா் கமல்சந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

முன்னாள் ஆளுநா் மணி, முன்னாள் உதவி ஆளுநா் முகமது யாசின், மண்டல செயலா் ஜான் கிறிஸ்டி ஆகியோா் சங்கத்தின் சேவைகள், போலியோ ஒழிப்பில் சங்கத்தின் பங்கு பற்றி பேசினா். விழாவில், பொறியியல் கல்லூரி மாணவி காயத்ரிக்கு கல்வித் உதவித் தொகை, விவசாயத் தொழிலாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. ரோட்டரி அறக்கட்டளைக்காக பூபாலன், ஜான் கிறிஸ்டி ஆகியோா் நன்கொடை அளித்தனா்.

Advertisement

விழாவில், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள எடையாா் கிராமத்தை சங்கம் சாா்பில் தத்தெடுத்து நலப் பணிகளை தொடா்ந்து நிறைவேற்ற உள்ளதாக அறிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.