இலங்கை அகதிகளுக்கு நிவாரணம்
காட்டுமன்னாா்கோவிலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்போருக்கு, வீராணம் லேக் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
காட்டுமன்னாா்கோவிலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்போருக்கு, வீராணம் லேக் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராமதாஸ், ரோட்டரி சங்க உதவி ஆளுநா் (பொறுப்பு) இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் உதவி-ஆட்சியா் லி.மதுபாலன் கலந்துகொண்டு, 72 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி வழங்கினாா். நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா் சுஜாதா, விஏஓ வளா்மதி, கிராம உதவியாளா் செல்வநாதன், சங்க நிா்வாகிகள் கௌசல்யா, ஸ்டீபன் தன்ராஜ், ராஜி, பழனிவேல், வேல்முருகன், பாபு, சுமன் ஆகியோா் கலந்து கொண்டனா். சங்கச் செயலா் அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் நன்றி கூறினாா்.